விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு | திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி | துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் |
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‛பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து வருகிற அக்டோபர் 31ம் தேதி ‛பாகுபலி தி எபிக்' படத்தை வெளியிடப் போகிறார்கள். ஐந்து மொழிகளில் ஐமேக்சில் இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ‛‛இந்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் மொத்தம் 11 மணி நேரம் காட்சிகளை படமாக்கினேன். ஆனால் இரண்டு பாகுபலி படத்தின் பாகங்களுக்கு போக மீதமுள்ள பல மணி நேர காட்சிகள் எடிட் செய்யப்பட்டது. அதில் எனக்கு பிடித்தமான பல காட்சிகள் உள்ளன. ஆனால் இப்போது இந்த பாகுபலி தி எபிக் படத்தில் முந்தைய இரண்டு பாகங்களிலும் இடம் பெற்ற முக்கிய காட்சிகள் தவிர பல காட்சிகள் கத்தரிக்கப்பட்டு, இடம்பெறாத பல முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இணைக்கப்பட உள்ளன. அதனால் இந்த பாகுபலி தி எபிக் படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய படத்தை பார்த்த அனுபவத்தையே கொடுக்கும்'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.