‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‛பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களையும் இணைத்து வருகிற அக்டோபர் 31ம் தேதி ‛பாகுபலி தி எபிக்' படத்தை வெளியிடப் போகிறார்கள். ஐந்து மொழிகளில் ஐமேக்சில் இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் ராஜமவுலி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ‛‛இந்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் மொத்தம் 11 மணி நேரம் காட்சிகளை படமாக்கினேன். ஆனால் இரண்டு பாகுபலி படத்தின் பாகங்களுக்கு போக மீதமுள்ள பல மணி நேர காட்சிகள் எடிட் செய்யப்பட்டது. அதில் எனக்கு பிடித்தமான பல காட்சிகள் உள்ளன. ஆனால் இப்போது இந்த பாகுபலி தி எபிக் படத்தில் முந்தைய இரண்டு பாகங்களிலும் இடம் பெற்ற முக்கிய காட்சிகள் தவிர பல காட்சிகள் கத்தரிக்கப்பட்டு, இடம்பெறாத பல முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இணைக்கப்பட உள்ளன. அதனால் இந்த பாகுபலி தி எபிக் படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய படத்தை பார்த்த அனுபவத்தையே கொடுக்கும்'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.




