லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

இந்திய திரையுலகம் கொண்டாடும் இசை மேதை இசையமைப்பாளர் இளையராஜா (வயது 82). 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை கடந்துள்ளார். அதோடு லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றி நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இதை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று(செப்., 13) ‛சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா நடந்தது. இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கங்கை அமரன் போன்ற இளையராஜா குடும்பத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
ராஜாவின் இசை மழை... முதல்வர் தேர்வு செய்த பாடல்கள்
இளையராஜாவின் குழுவினரின் இசை நிகழ்ச்சியோடு பாராட்டு விழா துவங்கியது. ‛அமுதே தமிழே...' என்ற பாடல் முதலில் பாடப்பட்டது. இந்த பாடலை இளையராஜாவும் அவரது குழுவினரும் பாடினர். தொடர்ந்து ‛‛ராக்கம்மா கைய தட்டு..., செந்தூரப்பூவே..., அந்தி மழை பொழிகிறது..., சின்னத்தாய் அவள்..., உன்ன நினைச்சு..., ராஜா கைய வச்சா..., காதலின் தீபம் ஒன்று..., மாறுகோ மாறுகோ...'' உள்ளிட்ட பல பாடல்கள் மேடையில் நேரலையில் பாடி, இசையமைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் இளையராஜாவின் இன்னிசை மழையை ரசித்தனர். முன்னதாக இந்த மேடையில் பாடிய பாடல்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்ததாக விழாவில் கமல் தெரிவித்தார்.
சிம்பொனி இசை
இசை நிகழ்ச்சியை தொடர்ந்து இளையராஜாவின் சிம்பொனி இசையும் இசைக்கப்பட்டது. இது ரசிகர்களை மேலும் இன்னிசை மழையில் நனையவிட்டது.