ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி | சமந்தா காதல் விவகாரம் : வதந்தி என்கிறார் மேனேஜர் | மூக்குத்தி அம்மன்-2 படத்தில் இரண்டு வேடங்களில் நயன்தாரா! | கிரவுட் பண்டிங்கில் உருவான 'மனிதர்கள்' | மீண்டும் கதை நாயகனாக காளி வெங்கட் | பிளாஷ்பேக்: வாகை சந்திரசேகரை அறிமுகப்படுத்திய பாரதிராஜா |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி நடிக்கும் தக்லைப் பட பாடல் வெளியீட்டு விழா, மே 24ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் யார் சிறப்பு விருந்தினர். மணிரத்னம், கமல், ஏ.ஆர்.ரகுமான் இணையும் படம் என்பதால், மிகப்பெரிய விஐபியே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாடல்களை வெளியிட வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.
2022ம் ஆண்டு நடந்த பொன்னியின் செல்வன் படவிழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நான் பெரிய பழுவேட்டையராக நடிக்க ஆசைப்பட்டேன் என தொடங்கி, பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசினார். அந்த பேச்சு படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாக அமைந்தது.
இந்நிலையில் மே 24ல் ரஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, படக்குழுவை வாழ்த்துவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரளாவில் இருக்கும் ரஜினிகாந்த் சில நாட்களில் சென்னை திரும்ப வாய்ப்புள்ளது. மணிரத்னம், கமல் அழைத்தால் அவர் மறுக்கமாட்டார்கள். ஆனால், அவர்கள் அழைப்பார்களா? அவர்கள் திட்டம் என்ன என்பது சஸ்பென்ஸ ஆக இருக்கிறது.