மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் |
கடந்த 2023ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கூலி படத்தை முடித்து விட்ட ரஜினிகாந்த், ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கோழிக்கோடு அருகே உள்ள செருவன்நூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் இங்கே படப்பிடிப்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கேரள மாநில சுற்றுலா துறை அமைச்சர் பிஏ முகமது ரியாஸ் ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் வருகை தந்து மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்துள்ளார். ரஜினி உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அமைச்சர் முகமது ரியாஸ், “நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” என ரஜினியின் பஞ்ச் டயலாக்கையும் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் கோழிக்கோடு பகுதியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது.