மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
விஜய்சேதுபதி, ருக்மணிவசந்த், திவ்யாபிள்ளை, பப்லு உட்பட பலர் நடிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் உருவாகும் படம் ஏஸ். இந்த படம் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. மலேசியாவில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. விஜய்சேதுபதி நடித்த 50வது படமான மகாராஜா பெரிய வெற்றி அடைந்து, 100 கோடியை வசூலித்தது. தொடர்ச்சியான தோல்விகளை கொடுத்து வந்த விஜய்சேதுபதிக்கு மகாராஜா பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.
அடுத்ததாக, 51வது படமாக ஏஸ் வருகிறது. அதனால் இந்த படத்தை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்கிய ஆறுமுககுமார், ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தை இயக்கியவர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த லாபம் படத்தை தயாரித்தனர். அந்தவகையில் 3வது முறையாக விஜய்சேதுபதியுடன் இணைந்து இருக்கிறார். இதில் யோகிபாபுவும் இருக்கிறார்.
ஹீரோயின் ருக்மணி வசந்த் கன்னடத்தில் முன்னணி ஹீரோயின். இந்த படம் மூலம் தமிழுக்கு வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி படத்திலும் ருக்மணிதான் ஹீரோயின்.