சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் |
ஐகான் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்எல்பி தயாரித்துள்ள படம் 'மையல்'. ஏபிஜே.ஏழுமலை இயக்கி உள்ளார். மைனா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சேது பல வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சம்ரிதிதாரா நடித்துள்ளார். எழுத்தாளர் ஜெய மோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இசை அமைப்பாளர் சவுந்தர்யன் மகன் அமர் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் நாயகி சம்ரிதிதாரா மலையாளத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழுக்கு வந்திருக்கிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டார் அட்ராக்ஷனாக இருந்தவர் சம்ரிதிதாரா. நிகழ்ச்சியில் பேசியவர்கள் சம்ரிதிதாரா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்றார்கள்.
குறிப்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசும்போது "சமந்தாவும் இல்லாமல் நயன்தாராவும் இல்லாமல் ஹீரோயினுக்கு இது என்ன புது பெயர் என்று யோசித்தேன். இந்த படம் வெற்றி பெற்று விட்டால் இந்த பெயரையே தொடருங்கள், இல்லாவிட்டால் பெயரை சுருக்கி வையுங்கள் என்று அவருக்கு கூறிக்கொள்கிறேன். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். அதற்கான அழகும், திறமையும் அவரிடம் இருக்கிறது. அவருக்கு பெரிய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்" என்றார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது "அழகு எல்லோருக்கும் அமைந்து விடும், ஆனால் அம்சம் அமையாது. இந்த படத்தின் நாயகிக்கு அழகும் இருக்கிறது, அம்சமும் இருக்கிறது. கூடவே நடிப்பு திறமையும் இருக்கிறது. இதனால் ரவிகுமார் சொன்னது போல அவர் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். அதற்கு அவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும். அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்.