டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோ சிரஞ்சீவி. தற்போது 'விஷ்வம்பரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அப்படத்திற்குப் பிறகு அனில் ரவிப்புடி இயக்க உள்ள புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.
இந்த புதிய பபடத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளார். அவர் படத்தில் நடிக்க 18 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டதாக செய்திகள் வெளியாகின. அவ்வளவு சம்பளத்தைக் கொடுக்கத் தயாரிப்பு நிறுவனம் யோசித்தாகச் சொன்னார்கள். இருந்தாலும் படத்தில் நயன்தாரா நடிப்பதை இயக்குனரும், சிரஞ்சீவியும் விரும்பியதாகத் தெரிகிறது.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சில கோடிகளைக் குறைத்துக் கொள்ள நயன்தாரா சம்மதம் சொல்லிவிட்டாராம். ஒப்பந்தம் கையெழுத்தானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
அனில் ரவிப்புடி கடைசியாக இயக்கி பொங்கலுக்கு வெளிவந்த 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. 'சைரா ' படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்த நயன்தாரா அடுத்து வந்த 'காட்பாதர்' படத்தில் தங்கையாக நடித்தார். இப்போது ஜோடியாக நடிக்க உள்ளார்.




