'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
கடந்த வருடம் மலையாளத்தில் பணி என்ற படம் வெளியானது. மலையாள திரையுலகில் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து வரும் ஜோஜூ ஜார்ஜ் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்ததுடன் முதன்முறையாக இந்த படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். நாடோடிகள் அபிநயா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பழிவாங்கும் கதையம்சத்துடன் வெளியான இந்த படத்தின் கதை விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. தமிழிலும் கூட இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தற்போது சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ, அடுத்தபடியாக வெளியாக இருக்கும் கமலின் தக் லைப் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தனது சோசியல் மீடியா பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய அடுத்த படம், புதிய கதை... புதிய இடங்கள்.. புதிய கதாபாத்திரங்கள்.. பணி-2 விரைவில்” என்று கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.