ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நேற்றைய தினம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் வெளியானது. 80களின் காலகட்ட பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சூர்யாவிற்கு ஒரு கம்பேக் என்று சொல்லும் விதமாக அமைந்துள்ளது என்றே ரசிகர்களும் விமர்சகர்களும் கூறி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் நடிகர் நானி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ஹிட்-3 என்கிற படமும் நேற்று வெளியானது. இந்த படங்கள் ஹிந்தி மொழியில் வெளியானாலும் கூட இதன் ஹிந்தி பதிப்புகள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. காரணம் ஓடிடி நிறுவனங்களுடன் இந்த படங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் தான்.
அதாவது படம் வெளியாகி 28 நாட்கள் வரை படங்களை ஓடிடிக்கு கொடுக்கக் கூடாது என்கிற நிபந்தனையை மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கடைபிடித்து வருகின்றன. ஆனால் இந்த இரண்டு படங்களும் 28 நாட்களுக்கு முன்பாகவே இந்த படங்களை ஓடிடியில் வெளியிடலாம் என்று ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்த இரண்டு படங்களின் ஹிந்தி பதிப்புகளை மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் திரையிடவில்லை என்று தெரியவந்துள்ளது.