'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் |
1980களின் நடுப்பகுதியில் விஜயகாந்தும், தியாகராஜனும் ஆக்சன் ஹீரோக்களாக வலம் வந்து கொண்டிருந்தார்கள். இருவரையும் இணைத்து ஒரு பெரிய ஆக்சன் படத்தை தயாரிக்க முன் வந்தது தேவர் பிலிம்ஸ். இருவரும் தனித்தனி ஹீரோக்களாக நடித்துக் கொண்டிருந்தாலும் அன்றைக்கு தேவர் பிலிம்ஸ்க்கு இருந்த சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக இணைந்து நடிக்க முன்வந்தார்கள்.
படத்தில் இரண்டு பேருமே ஹீரோக்கள் தான். ஆனால் அவர்கள் அடிக்கடி மோதுவதற்கான காரணம் இருந்தது. தனது தந்தையை கொன்ற தியாகராஜனின் தந்தையை கொன்று விட்டு சிறுவர் செயலுக்கு சென்று விடுவார் விஜயகாந்த். தனது தந்தையை கொன்ற விஜயகாந்தை பழிவாங்க அவர் விடுதலை நோக்கி காத்திருப்பார் தியாகராஜன்.
விஜயகாந்தின் தங்கை நளினியை தியாகராஜன் காதலிப்பார், விஜயகாந்த் விஜியை காதலிப்பார். விஜயகாந்த்தும் தியாகராஜனும் ஒருவரை ஒருவர் பழி தீர்க்க திட்டமிடுவார்கள், செயல்படுவார்கள். அதற்கு இரண்டு பேருக்குமே நியாயமான காரணம் இருந்ததுதான் திரைக்கதையின் சிறப்பு.
எல்லா காட்சிகளிலுமே விஜயகாந்துக்கும் தியாகராஜனுக்கும் சம பங்கு இருந்தது. யாருமே அடக்க முடியாத ஒரு குதிரை தியாகராஜன் அடக்குவார். அதேபோல விஜயகாந்த் ஒரு புலியை அடக்குவார். இந்த இரு காட்சிகளுமே அப்போது பெருமையாக பேசப்பட்டது. படமும் ஆக்சன் காட்சிகளுக்காகவே வெற்றி பெற்றது.
ஆர் தியாகராஜன் இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளிவந்து கொண்டிருந்த கௌபாய் படங்களில் சாயலில் இருந்ததால் மேற்கத்திய இசையின் வடிவத்திலேயே இளையராஜா பின்னணி இசை அமைத்திருந்தார். தேவர் பிலிம்ஸ் வெற்றி படங்களில் இந்த படமும் இணைந்தது.