செப்டம்பரில் ‛வா வாத்தியார்' படத்தை வெளியிட திட்டம்! | ஹீரோவாக நடிக்கும் படத்திற்காக தற்காப்பு கலை பயிற்சி பெறும் லோகேஷ் கனகராஜ்! | தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் |
ஓதுவார்கள் ஆன்மிக குருக்கள், கோயில்களுக்குள் மட்டுமே பேசப்பட்டு வந்த ஆண்டாளின் பெருமையை சாதாரண மக்களுக்கும் சொன்ன படம் 'ஸ்ரீ ஆண்டாள்'. 1948ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் யு.ஆர். ஜீவரத்னம் ஆண்டாளாக நடித்தார். அப்போது அவருக்கு வயது 20.
பி.எஸ். கோவிந்தன் ஆண்டாளின் தந்தையாக நடித்தார். இவர்கள் தவிர, 'வித்வான்' சீனிவாசன், எஸ்.டி. சுப்பையா, 'குமாரி' செல்வம், காளி என்.ரத்தினம், பி.கே. மாதவன், வி.எம். ஏழுமலை, 'கோட்டப்புலி' ஜெயராமன், எஸ்.கே. ராமராஜ், பி.எஸ். ஞானம், எம்.இ.மாதவன், ஜி.ஆர். ஸ்ரீராமுலு, எம்.கே. கமலம், எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ஜி.சவுதாமினி ஆகியோரும் நடித்தனர். ஜி.ராமநாதன் இசையமைத்தார்.
ஆனால் அதற்கு முன்பு அதாவது 1937ம் ஆண்டு ஆண்டாளின் கதை திரைப்படமாக வெளியானது. பிரபல தேவாரப் பாடகர் சுந்தர ஓதுவார் மூர்த்தி ஆண்டாளின் தந்தையாக நடித்தார். ஆண்டாளாக நடித்தது யார் என்பது உள்ளிட்ட வேறு எந்த தகவலும் இந்த படம் தொடர்பாக கிடைக்கவில்லை. அதனால் 'ஸ்ரீ ஆண்டாள்' படமே ஆண்டாளின் பெருமை பேசும் முதல் படமாக பதிவாகிறது. இந்தப் படங்களின் பிரிண்டுகளுமே இப்பொழுது இல்லை.