ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
இந்தியத் திரையுலகத்தில் பெரும் வசூல் சாதனை படைத்த 'பாகுபலி 2' படம் வெளிவந்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தெலுங்குத் திரையுலகத்தை சர்வதேச அளவில் எடுத்துச் சென்ற படமாக அது அமைந்தது.
அந்த சரித்திரப் படத்திற்குப் பிறகு இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான 'மகாபாரதம்'-ஐ தனது கனவுப் படம் என பேட்டிகளில் சொல்லி வந்தார். அந்தப் படத்திற்குரிய ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளை அவரது அப்பா விஜயேந்திர பிரசாத் ஏற்கெனவே செய்து வருகிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று நடந்த 'ஹிட் 3' படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ராஜமவுலி. அப்போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் 'மகாபாரதம்' படத்தில் நானி நடிப்பது உறுதியானதா?” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ராஜமவுலி, “நானி அதில் நடிக்கிறார் என்பது மட்டும் பிக்ஸ் ஆகிவிட்டது” என்றார்.
ராஜமவுலி இயக்கிய 'நான் ஈ' படத்தில் சமந்தாவின் காதலராக கொஞ்ச நேரமே நடித்து மனதில் இடம் பிடித்தார் நானி. அதன்பின் ராஜமவுலியின் இயக்கத்தில் அவர் நடிக்கவில்லை. இப்போது 'மகாபாரதம்' படத்தில் நானி நடிப்பது குறித்து முதல் அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.