'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம் பெற்ற ‛வீரா ராஜா வீரா' என்ற பாடல் சிவா ஸ்துதி பாடலை போல் உள்ளதாக பயாஸ் வாசிபுதீன் தாகர் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பான வழக்கில் ‛சிவா ஸ்துதி' பாடல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு அதை தழுவி ‛வீரா ராஜா வீரா' பாடலை உருவாக்கியதாக ரஹ்மானே கோர்ட்டில் தகவல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் காப்புரிமை சட்டப்படி ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடியை டில்லி ஐகோர்ட் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும் மனுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.