ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
'கூலி' படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பஹத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் உள்ள ஆணைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆணைக்கட்டியில் இருந்து மாங்கரைக்கு ரஜினிகாந்த் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோயிலில் இறங்கி சாமி தரிசனம் செய்திருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கோயில் வாசலில் ரஜினியின் கார் வந்து நின்றதும், பூசாரி ஓடிவந்து அவரை வரவேற்க, ரஜினி கோயிலுக்குள் சென்றதும் பூஜை தீபாராதனை நடத்தப்பட்டு சாமி தரிசனம் செய்கிறார். அதையடுத்து அவருக்கு பூசாரி விபூதி பூசி விடும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.