ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு | ஆயிரம் கோடி வசூல் கனவு…. காத்திருக்கும் தமிழ் சினிமா…. | என்டிஆர் - நீல் படப்பிடிப்பு ஆரம்பம்: 'சலார், கேஜிஎப் 3' நடக்குமா? | 'வின்னர், கிரி' - காமெடியை மீண்டும் தருமா 'கேங்கர்ஸ்' கூட்டணி | இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? | உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' |
1984ம் ஆண்டு வெளியான 'மைடியர் குட்டிச்சாத்தான்' படைத்த பல சாதனைகள் பற்றி அனைவரும் அறிந்ததுதான். முதல் 3டி படம், 40 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி அந்தக் காலத்திலேயே 25 கோடி வரை வசூலித்த படம், எல்லா மொழிகளிலும் அந்தந்த மொழி நடிகர்களை இணைத்து வெளியிட்ட படம். மலையாளத்தில் கோடியில் வசூலித்த முதல்படம். இப்படி பல சாதனைகள் அந்த படத்திற்கு உண்டு.
3டி கண்ணாடி அணிந்து கொண்டு உற்சாகமாக படம் பார்த்து திரையில் இருந்து வரும் ஐஸ்கிரீமை தொட முயன்று தோற்ற அனுபவம் 80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்தது. ஆனாலும் குட்டிச்சாத்தானுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அது பல தலைமுறைகளை வாழ வைத்த படம். இந்த படத்தின் லாபத்தின் பெரும் பகுதியை கொண்டு சென்னை அருகே 'கிஸ்கிந்தா' என்ற தீம் பார்க்கை உருவாக்கினார் தயாரிப்பாளர் அப்பச்சன்.
படத்தில் இடம்பெற்ற 'சுட்டி குழந்தைகளே' என்ற பாடலுக்காக பல லட்சம் செலவில் செட் அமைத்த அப்பச்சனுக்கு அதே இடத்தில் ஒரு தீம் பார்க் கட்டும் ஆசையும் வந்தது. படம் வெளியான பிறகு அது நிறைவேறவும் செய்தது. இன்றைக்கு அந்த தீம் பார்க்கின் மதிப்பு ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்கிறார்கள். ஒரே ஒரு படம் பல தலைமுறையின் அசையா சொத்தானது. சினிமா செய்யும் மேஜிக்குகளில் இதுவும் ஒன்று.