ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஷ்னோவா நேற்று திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி, நேற்றைய அன்னதான செலவையும் ஏற்றுக் கொண்டார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளை தரிசனம் செய்வதற்கு அவர்கள் 'நம்பிக்கை உறுதி ஆவணம்' ஒன்றில் கையெழுத்திட வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.
சிங்கப்பூரில் படித்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் காயமடைந்து குணமடைந்து வருகிறார். அதற்காக திருப்பதி சென்று முடி காணிக்கை, அன்னதானம் செய்த அன்னா, நம்பிக்கை உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்ட பின்பு பெருமாளை தரிசனம் செய்துள்ளார்.
அவர் அப்படி செய்ததற்கு பக்தர்கள் பாராட்டி வருகிறார்கள். இதற்கு முன்பு ஆந்திர மாநில முதல்வராக இருந்த கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி சென்ற போதெல்லாம் அவர் பெருமாளை தரிசனம் செய்ததில்லை. நம்பிக்கை உறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு செல்வதைத் தவிர்க்கவே அவர் அப்படி செய்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான பக்தர்கள் ஜெகன்மோகன் ரெட்டியையும், அன்னாவையும் ஒப்பிட்டு, அன்னாவைப் பாராட்டி வருகிறார்கள்.