அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் |
கடந்த மாதம் கன்னட நடிகை ரன்யா ராவ் விமானம் மூலம் அடிக்கடி தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'வாகா' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இவர்தான். கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் தான் ரன்யா ராவ். பெங்களூருவில் இருந்து துபாய்க்கு சென்று அடிக்கடி தங்கம் கடத்தி வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார் ரன்யா ராவ். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இது குறித்த வழக்கு, சிறப்பு விசாரணை அதிகாரி கவுரவ் குப்தா என்பவர் தலைமையில் நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையின் போது விமான நிலையத்திற்குள் பாதுகாப்பு சோதனைகள் ஏதுமின்றி தாராளமாக சென்று வருவதற்கு தனது தந்தையின் பெயரை ரன்யா ராவ் பயன்படுத்தினார் என்பது இந்த விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரன்யா ராவ் அடிக்கடி தனது தந்தையின் போலீஸ் வாகனத்தை பயன்படுத்தி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
தனது மகள் என்பதால் கெடுபிடிகள் காட்ட வேண்டாம் என்று ராமச்சந்திர ராவ் அங்குள்ள அதிகாரிகளுக்கு வாய்மொழியாக கூறியிருந்தார் என்றும் அதற்கான சிசிடிவி காட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் ரன்யா ராவ் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்பது தனக்குத் தெரியாது என்று வளர்ப்பு தந்தை டிஜிபி ராமச்சந்திரன் கூறியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையை தற்போது கர்நாடக முதல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.