லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சூர்யா நடிப்பில் அடுத்து ரெட்ரோ படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். திரிஷா நாயகியாக நடிக்க, சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. சில நாட்களாக இந்த படத்திற்காக ஈ.சி.ஆரில் பிரமாண்டமான கிராமம் போன்ற அரங்கம் அமைத்து 500 நடன கலைஞர்களுடன் சூர்யா, த்ரிஷா இணைந்து நடனமாடியதை படமாக்கியுள்ளனர். இந்த பாடல் காட்சியை ஷோபி மாஸ்டர் இயக்கியுள்ளார்.