இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக பிரபல பாடலாசிரியராக அறியப்பட்டவர் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன். 78 வயதான இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று காலமானார். இவர் மலையாளத்தில் 200 படங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட்டான பல பாடல்களை எழுதியுள்ளார். அது மட்டுமல்ல எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இன்னொரு பக்கம் கேரளாவில் வெளியாகும் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிமாற்று படங்களுக்கு மலையாளத்தில் வசனம் எழுதுவதிலும் கை தேர்ந்தவராக விளங்கினார். குறிப்பாக இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மகதீரா, ஈகா, பாகுபலி, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் மலையாளத்தில் வெளியானபோது அதற்கு வசனம் எழுதியது இவர்தான். இவரது மறைவுக்கு மலையாள திரை உலகை சேர்ந்தவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.