தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் |
கடந்தாண்டு விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கினார் வெங்கட்பிரபு. இதன்பின் இவரது அடுத்த படம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன், அக்ஷய் குமார் போன்ற நடிகர்களுடன் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் வெங்கட் பிரபு ஹிந்தியில் படம் இயக்குவதற்காக சில மாதங்களாக அக்ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்போது அக்ஷய் குமார் இவர் இயக்கத்தில் நடிக்கிறேன் என கூறி உள்ளாராம். அதேசமயம் அவர் கைவசம் உள்ள படங்களை முடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க 10 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.