60வது வயதில் புது காதலியை அறிமுகம் செய்த அமீர்கான் | இப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்குமா? : சிவாங்கி நெத்தியடி பதில் | கார் தவணை கூட கட்டமுடியாத கஷ்டம்! ஆனால் இப்போது? | ஜி.வி. பிரகாஷ்க்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த 25வது படம் 'கிங்ஸ்டன்' | திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம்: நடிகை ரூபினியிடம் ஒன்றரை லட்சம் மோசடி! | கூலி படப்பிடிப்பில் 39வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்! | 55வது படத்தில் பயோபிக் கதையில் நடிக்கும் தனுஷ்! | பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியன்கர்! | அஜித்தின் 'குட் பேட் அக்லி', சூர்யாவின் 'ரெட்ரோ' இரண்டு படங்களும் ஒரே மாதிரி கதையா? | வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட அக்ஷய் குமார் |
1980 - 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரூபினி, ரஜினியுடன் 'மனிதன், ராஜா சின்ன ரோஜா' போன்ற படங்களில் நடித்தவர், கமலுடன் 'அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன்' மற்றும் விஜயகாந்துடன் 'புலன் விசாரணை' என பல ஹிட் படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு, அங்குள்ள விடுதியில் தங்குவதற்கு என சரவணன் என்ற நபர் ரூபினிடத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். ஆனால் அதையடுத்து திருப்பதி கோவிலில் தரிசனம் செய்வதற்கு எந்த ஏற்பாடும் செய்யாத அந்த நபர் திடீரென்று தலைமறைவாகி விட்டாராம். இதை அடுத்து தன்னை சரவணன் என்ற அந்த நபர் தன்னை மோசடி செய்துவிட்டதை அறிந்த ரூபினி, கடவுளின் பெயரை சொல்லி மோசடி செய்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.