இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய முதல் படம் 'சென்னை -28'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு அவர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு சரோஜா, கோவா போன்ற படங்களை இயக்கியவர், பின்னர் அஜித் நடிப்பில் 'மங்காத்தா' படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். அந்த படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில், 2016ம் ஆண்டு தனது முதல் படமான 'சென்னை- 28' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் வெங்கட்பிரபு.
இந்நிலையில் தற்போது, 'மாநாடு, கஸ்டடி, கோட்' படங்களுக்கு பிறகு சென்னை- 28 படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போகிறார். முதல் இரண்டு பாகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்த ஜெய், மிர்ச்சி சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி ஆகியோரே இந்த படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.