ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் |
'புஷ்பா 2' படம் மூலம் பான் இந்தியா ஸ்டார் என்பதையும் தாண்டி வசூல் ஸ்டார் என்ற பெயரைப் பெற்றார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன். அவரது அடுத்த படம் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கும் படம்தான் என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னணி நடிகர்களின் படங்களை அப்படம் தயாரித்துள்ளது. அந்நிறுவனத்தின தயாரிப்பாளரான நாக வம்சி, சமீபத்திய சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அல்லு அர்ஜுன், திரிவிக்ரம் சீனிவாஸ் படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.
அப்படம் சமூக - புராணப் படமாக இருக்கும் என்றும், இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் படம் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளார். 'புஷ்பா 2' படத்தை விடவும் அந்தப் படத்தை பிரம்மாண்ட எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அல்லு அர்ஜுன், த்ரிவிக்ரம் சீனிவாஸ் கூட்டணி ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் இணைகிறது.
அட்லியும் அவரது அடுத்த படத்திற்காக அல்லு அர்ஜுனிடம் பேசி வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அப்படம் இப்போதைக்கு ஆரம்பமாவதாகத் தெரியவில்லை.