15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் பிரதீப் ரங்கநாதன். தனது இரண்டாவது படமான 'லவ் டுடே'வை இயக்கி அதில் தானே கதாநாயகனாக நடித்து ஒரு நடிகராகவும் இளைய தலைமுறை ரசிகர்களை கவர்ந்தார். அந்த படம் கொடுத்த வெற்றியில் தற்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தின் 'டிராகன்' என்கிற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். கடந்த வாரம் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
குறிப்பாக ஷங்கர் உள்ளிட்ட மிகப்பெரிய இயக்குனர்கள் கூட இந்த படத்தை, பிரதீப் ரங்கநாதனின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த 'உப்பென்னா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவரும் தற்போது ராம்சரணின் படத்தை இயக்கி வருபவருமான இயக்குனர் புச்சி பாபு சனா, டிராகன் படம் பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதனுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டிராகன் படம் நேற்று இரவு பார்த்தேன். ஒரு நல்ல மெசேஜூடன் கூடிய உணர்ச்சிகரமான, அதேசமயம் பெர்பெக்ட்டான பொழுதுபோக்கு படம். பிரதீப் ரங்கநாதன் இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் விதமாக என்ன ஒரு அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவின் எழுத்துக்கள், குறிப்பாக கிளைமாக்ஸ் ரொம்பவே சூப்பராக இருந்தது” என்று கூறியுள்ளார் புச்சி பாபு சனா.