ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
தமிழில் 'மிருகம்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி. “ஈரம், அரவான், மரகத நாணயம்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், தெலுங்கில் சில படங்களிலும் நடித்தவர் ஆதி. நடிகை நிக்கி கல்ரானியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்.
'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நாயகனாக நடித்துள்ள 'சப்தம்' படம் நாளை மறுதினம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக தெலுங்கிலும் பல பேட்டிகளைக் கொடுத்துள்ளார் ஆதி. அதில் ஒன்றில், “நிக்கியுடனான எனது திருமண வாழ்க்கை இனிமையாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் ஆதராமில்லாமல் விவாகரத்து வதந்திகளை சில யு டியூப் சேனல்கள் பரப்புவது வலியைத் தருகிறது.
காதலிப்பதற்கு முன்பும், திருமணமாகி கணவன், மனைவி ஆன பின்னும் நானும் நிக்கியும் நல்ல நண்பர்கள். எங்கள் இதயத்தால் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இப்படியான வதந்திகள் பரவும் போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முதலில் இது எனக்கு வருத்தமாக இருந்தது. போகப் போக, வருமானத்திற்காக சில யு டியூப் சேனல்கள் இப்படி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை கண்டு கொள்வதில்லை,” என்று கூறியுள்ளார்.