14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் |
தமிழில் 'மிருகம்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி. “ஈரம், அரவான், மரகத நாணயம்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், தெலுங்கில் சில படங்களிலும் நடித்தவர் ஆதி. நடிகை நிக்கி கல்ரானியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்.
'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நாயகனாக நடித்துள்ள 'சப்தம்' படம் நாளை மறுதினம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்திற்காக தெலுங்கிலும் பல பேட்டிகளைக் கொடுத்துள்ளார் ஆதி. அதில் ஒன்றில், “நிக்கியுடனான எனது திருமண வாழ்க்கை இனிமையாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் ஆதராமில்லாமல் விவாகரத்து வதந்திகளை சில யு டியூப் சேனல்கள் பரப்புவது வலியைத் தருகிறது.
காதலிப்பதற்கு முன்பும், திருமணமாகி கணவன், மனைவி ஆன பின்னும் நானும் நிக்கியும் நல்ல நண்பர்கள். எங்கள் இதயத்தால் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். இப்படியான வதந்திகள் பரவும் போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. முதலில் இது எனக்கு வருத்தமாக இருந்தது. போகப் போக, வருமானத்திற்காக சில யு டியூப் சேனல்கள் இப்படி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை கண்டு கொள்வதில்லை,” என்று கூறியுள்ளார்.