பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த படம் புஷ்பா. அப்படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். 200 கோடி பட்ஜெட்டில் உருவான அப்படம் 500 கோடி வசூலித்தது. மீண்டும் சுகுமார் இயக்கத்தில் அதே கூட்டணி புஷ்பா -2 படத்தில் இணைந்தார்கள். 500 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 1800 கோடி வரை வசூலித்தது.
இந்த நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் அளித்துள்ள ஒரு பேட்டியில், புஷ்பா-2 படத்தில் இடம்பெற்ற பெண் காட்சி குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், புஷ்பா -2 படத்தின் ஒரு பாடல் காட்சியில் புடவை அணிந்து பெண்ணை போன்று வேடமிட்டு நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதும் முதலில் பயந்து விட்டேன். என்றாலும் அதன்பிறகு அந்த கேரக்டரை என் மனதில் உள்வாங்கி எனக்கு நானே ஒரு தைரியத்தை வர வைத்துக் கொண்டு அதில் நடித்தேன். அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பது எனக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் அல்லு அர்ஜுன்.