ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் | கமல் உடன் இணைந்து நடிக்க ஆசை! - நடிகர் பிரியதர்ஷி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், இயக்குனராகவும் இருக்கிறார். அவரது இயக்கத்தில் 'ப பாண்டி, ராயன்' ஆகிய படங்கள் இதற்கு முன்பு வெளிவந்த. 'ப பாண்டி' படம் சுமாரான வெற்றியாகவும், 'ராயன்' படம் 100 கோடி வெற்றியாகவும் அமைந்தது.
அவரது இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள 'நிலவுக்கு என் மோல் என்னடி கோபம்' படம் நாளை பிப்ரவரி 21ம் தேதி வெளியாக உள்ளது. 'ப பாண்டி' படத்தில் பிளாஷ்பேக்கிலும், 'ராயன்' படத்தில் முழுமையாகவும் நடித்த தனுஷ் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். முதலிரண்டு படங்களும் முக்கிய நடிகர்கள், நடிகைகள் நடித்த படம்.
ஆனால், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் அறிமுக மற்றும் வளரும் நட்சத்திரங்கள் நடித்துள்ள படம். அதனால், இந்தப் படம் வெற்றி பெறும் பட்சத்தில் இயக்குனராக தனுஷின் இமேஜ் இன்னும் உயரும். இப்படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் ஏற்கெனவே இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால் படமும் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் இயக்கத்தில் நான்காவது படமாக 'இட்லி கடை' உருவாகி வருகிறது. அப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது. இந்த வருடம் தனுஷ் இயக்கத்தில் இரண்டு படங்கள் வெளியாவது ஆச்சரியம்தான்.