லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தற்போது ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் 'சிக்கந்தர்' என்ற படத்தை இயக்கி வரும் ஏ.ஆர். முருகதாஸ், தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 23வது படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இந்த படத்துக்கு 'மதராஸி' என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். அது மட்டுமின்றி இப்படத்துக்கு அப்படி ஒரு டைட்டில் வைத்ததற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ''இந்த 'மதராஸி' படம் ஆக்சன் கதையில் தயாராகி வருகிறது. குறிப்பாக அமரனுக்கு பிறகு இந்த படம் சிவகார்த்திகேயனின் வாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லும் படமாக இருக்கும். வட இந்தியாவில் உள்ள மக்கள் தென்னிந்திய மக்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்த வகையில், தென்னிந்திய மக்களை மதராஸி என்று தான் அவர்கள் அழைத்து வருகிறார்கள். அதன் காரணமாகவே இந்த படத்துக்கு மதராஸி என்று டைட்டில் வைத்திருக்கிறேன். இந்த படம் பார்க்கும்போது இந்த டைட்டில் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக அனைவரும் கூறுவார்கள்,'' என்று தெரிவித்துள்ளார் ஏ. ஆர். முருகதாஸ்.