கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
கடந்த ஆண்டில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசன் அவரது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ. 325 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் நேற்று அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் கூறுகையில், "அமரன் படம் முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே எனக்கு சம்பளம் முழுவதையும் கொடுத்து, சரியான மரியாதையும் தந்தது ராஜ்கமல் நிறுவனம். அதற்கு ரொம்ப நன்றி கமல் சார். இதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், நான் சரியான நேரத்தில் சம்பளம் வாங்கியது மிகவும் குறைவான படங்களில் தான். சில நேரங்களில் படம் வெளியாகும் போது கொடுத்த சம்பளத்திலிருந்து பாதியை வாங்கிக் கொண்டும் சென்றுள்ளார்கள்" என தெரிவித்துள்ளார்.