அல்லு அர்ஜுன் - அட்லீ படம் விரைவில் ஆரம்பம்? | அவசியம் வந்தால் நானே சொல்வேன் - மாதம்பட்டி ரங்கராஜ் | தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் டேவிட் வார்னர் | பிரியங்கா சோப்ராவின் 'தமிழன்' பட அனுபவம் பகிர்ந்த அம்மா | 'சப்தம்' படத்திற்கு இயக்குனர் ஷங்கர் பாராட்டு | யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் |
விசு போன்று நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் மவுலி. 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பில் குணசித்ர வேடத்திலும், காமெடி வேடத்திலும் நடித்தார். இயக்கிய படங்கள் அனைத்தும் குடும்ப படங்கள். அவர் கதையின் நாயகனாக நடித்த படம் 'அண்ணே அண்ணே'.
இந்த படத்தையும் அவரே இயக்கி இருந்தார். அவருடன் சுமித்ரா, விஜி, வனிதா, சார்லி, வி.கே.ராமசாமி, லியோ பிரபு உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார், தேவி பிரசாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
கட்டாந்தரையில் படுத்துறங்க துடிக்கும் பணக்காரரும், பஞ்சு மெத்தையில் படுத்துறங்க ஆசைப்படும் ஏழையும் இடம் மாறிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் படத்தின் கதை. படம் நாடகம் பார்ப்பது போன்று இருப்பதாக அன்றைக்கு விமர்சனம் எழுந்தது. இளையராஜாவின் பாடல்களும் படத்திற்கு உதவில்லை. படம் தோல்வி அடைந்தது.