ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலத்தில் அங்கிருந்து வந்த அகதிகள் பற்றிய பல படங்கள் வெளிவந்திருக்கிறது. அவர்களுக்கு தனிமுகாம் அமைத்துக் கொடுத்து இன்று வரை அரசு பாதுகாத்து வருதுகிறது. இதே மாதிரி இரண்டாம் உலகப்போர் நடந்தபோது பர்மாவில் இருந்து இந்தியா வந்த அகதிகளை பற்றி முதன் முதலில் பேசிய படம் 'மானஸம்ரக்ஷணம்'.
தமிழர்கள் உலகம் முழுக்க சென்று தங்கள் உழைப்பால் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவி அங்கேயே செட்டிலாகி இருக்கிறார்கள். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என இந்த பட்டியல் நீளமானது. அந்த வரிசையில் தமிழர்கள் பர்மாவிலும் குடியேறி அந்த நாட்டுக்காக உழைத்து அங்கேயே செட்டிலானார்கள்.
இரண்டாம் உலகப்போர் நடந்த போது ஜப்பான் பர்மாவை கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிர் அணியில் இருந்த ஜப்பான் பர்மாவில் வாழும் இந்தியர்களை குறிப்பக தமிழர்களை நாட்டை விட்டு விரட்டி அடித்தது. இதனால் தமிழர்கள் காடு, மலைகளை கடந்து பின்னர் மறைமுகமாக கடல் கடந்து இந்தியா வந்தார்கள். இந்த அகதிகளின் பயணத்தை மையமாக வைத்து உருவானதுதான் இந்த படம்.
இந்த பயணத்தின் போது படத்தின் நாயகி எஸ்.டி.சுப்புலட்சுமி, கொடுமையான பயணத்தில் பெரியவர்கள் கொல்லப்பட்டு விடக்கூடும். இதனால் நம் சந்ததிகளாவது தாய் நாடு திரும்ப வேண்டும் என்று நினைத்து 'மானஸம்ரக்ஷணம்' என்ற அமைப்பை தொடங்குகிறார். எல்லோருடைய குழந்தைகளையும் தாய்நாட்டில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை இந்த அமைப்பு ஏற்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
இதில் எஸ்.டி.சுப்புலட்சுமியுடன், ஜி.பட்டு அய்யர், வி.என்.ஜானகி, டி.ஆர்.ராமச்சந்திரன், காளி என்.ரத்னம், டி.கே.சம்பங்கி, எம்.ஆர்.எஸ்.மணி, டி.ஆர்.பி.ராவ், எம்.ஏ.கணபதி பட், வி.எஸ்.சந்தானம் அய்யங்கார், ஆர்.ராமானுஜா சாரியார், ச.ராமானுஜா சாரியார், சலட்சுமி, சலட்சுமி, வி.ஏ. 'குமாரி' சுப்புலட்சுமி ஆகியோர் நடித்திருந்தார்கள்.
கே.சுப்பிரமணியம் இயக்கி இருந்தார். தியாகராஜன் இசை அமைத்திருந்தார், தாம்பு ஒளிப்பதிவு செய்திருந்தார். பின்னாளில் 2015ம் ஆண்டில் தனுஷ் நடித்த 'அனேகன்' படம் பர்மா தமிழர்களை மையமாக கொண்டு வெளியானது.