நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் | அஜித்தின் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' பட டீசர்களுக்கு இடையே இப்படி ஒரு வித்தியாசமா? | 'மதராஸி' தாமதம்: தயாரிப்பாளர் கோபம்: மீண்டும் நடக்குமா? | மீண்டும் 9 படங்கள் ரிலீஸ் ஆகும் வாரம்… | பழம்பெரும் நடிகை பிந்து கோஷிற்கு உதவிய கேபிஒய் பாலா! |
தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலம் கூர்க்-கைச் சொந்த ஊராகக் கொண்டவர். கன்னட சினிமாவில் நடித்து பின் தெலுங்கில் அறிமுகமாகி அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது ஹிந்தியிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வருகிறார். அவரது நடிப்பில் நேற்று வெளியான ஹிந்திப் படமான 'சசாவா' நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்மிகா பேசும் போது தன்னை ஹைதராபாத்தில் இருந்து வந்தவர் என்று குறிப்பிட்டுப் பேசினார். அது கன்னட மக்களை கோபப்படுத்தி உள்ளது. எங்கு சென்றாலும் தனது பூர்வீகத்தை ரஷ்மிகா மறக்கக் கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சொந்த ஊரை விட்டு ஹைதராபாத்தில் செட்டிலாகி உள்ளார் ரஷ்மிகா. அதனால்தான் அவர் அப்படிப் பேசியுள்ளார் என்றும் சிலர் ரஷ்மிகாவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு, ஹிந்தியில் மட்டுமே நடிக்க ரஷ்மிகா ஆர்வம் செலுத்தி வருவதும் கன்னட ரசிகர்களின் கோபத்திற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.