ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3' என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் ஐஸ்வர்யா ரஜினி. இந்த படத்தில்தான் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலைவெறி' என்ற பாடல் உலக அளவில் வெற்றி பெற்ற போதும், இந்த படம் படு தோல்வி அடைந்தது. அதேபோல் கவுதம் கார்த்திக் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய 'வை ராஜா வை' என்ற படமும் தோல்வியடைந்த நிலையில், மூன்றாவதாக விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்த 'லால் சலாம்' படமும் ஐஸ்வர்யா ரஜினிக்கு தோல்வி படமாகவே அமைந்து விட்டது.
இதையடுத்து சித்தார்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்காக தயாரிப்பாளரை தேடி வந்தார் ஐஸ்வர்யா ரஜினி. ஆனால் அவரது கதையை தயாரிப்பதற்கு யாரும் முன் வரவில்லையாம். இதன் காரணமாக ஒரு புதிய பட நிறுவனம் தொடங்கி, தான் இயக்கும் அடுத்த படத்தை தானே தயாரிக்கப் போகிறாராம் ஐஸ்வர்யா. புது முகங்கள் நடிக்கும் அந்த படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகிறதாம்.