சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
மலையாள திரையுலகில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக புகார் அளிக்க தொடங்கினர். இதில் சில குணச்சித்திர நடிகர்கள், இயக்குனர்கள் மீது காவல்துறையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நிகழ்வுகளும் நடைபெற்றன.
இப்படி அடுத்தடுத்து பல நடிகைகள் புகார் கூறியதை தொடர்ந்து இதை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது கேரள அரசு. இந்த குழுவின் விசாரணையில் நடிகை ஒருவர் ஏற்கனவே பிரபல நடிகரும் தற்போது கொல்லம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவருமான முகேஷ் மீது கொடுத்திருந்த புகாரை விசாரித்து அதில் உண்மை இருக்கிறது என தற்போது முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த சிறப்பு விசாரணை குழு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடிகர் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனுடன் இமெயில் மற்றும் வாட்சப் ஆதாரங்கள் போன்றவற்றையும் சில சாட்சியங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஏற்கனவே இதே நடிகையின் குற்றச்சாட்டின் பெயரில் தான் முகேஷ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுதலையானார். இந்த நிலையில் மீண்டும் அவர் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.