ஆக., 22ல் ரீ-ரிலீஸாகும் 'கேப்டன் பிரபாகரன்' | மம்முட்டி, பவன் கல்யாண் வரலாற்று படங்களின் இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரே போல நடந்த சோகம் | செல்போனை பறித்தாரா அக்ஷய் குமார் ? உண்மையை வெளியிட்ட லண்டன் ரசிகர் | 'டகோய்ட்' படப்பிடிப்பில் ஆத்வி சேஷ்-மிருணாள் தாக்கூர் காயம் | ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | ரஜினியின் 'கூலி': அமெரிக்காவில் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன! | மாரீசன் பற்றி மனம் திறந்த பஹத் பாசில் | திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் |
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் அவ்வப்போது நடிப்பவர் தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். சமந்தாவுக்கும் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகத் தற்போது செய்திகள் பரவி வருகின்றன.
நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து பிரிந்தவர் சமந்தா. நாக சைதன்யா சில மாதங்களுக்கு முன்பு நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்று வந்தார் சமந்தா.
இயக்குனர் ராஜ் நிடிமொரு மற்றும் கிருஷ்ணா டி.கே இருவரும் ராஜ் - டிகே என்ற பெயரில் சில படங்களையும், 'பேமிலி மேன், பார்சி, சிட்டாடல் ஹன்னி பன்னி' உள்ளிட்ட வெப் தொடர்களையும் இயக்கியுள்ளார்கள். 'பேமிலி மேன், சிட்டாடல் ஹன்னி பன்னி' ஆகிய தொடர்களில் சமந்தா நடித்துள்ளார். அப்போது சமந்தாவுக்கும், ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள்.
'பிக்கல்பால்' என்ற புதிய விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 'வேர்ல்டு பிக்கல்பால் லீக்' என்ற போட்டியில் சென்னை அணியின் உரிமையாளராக இருக்கிறார். இந்த போட்டிகள் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றன. அப்போது சமந்தா மற்றும் டிகே ஒன்றாக வந்தது அவர்களுக்கிடையிலான காதலைப் பற்றி வெளிப்படுத்துவதாக உள்ளதென பேசப்பட்டுள்ளது.