கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் அவ்வப்போது நடிப்பவர் தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். சமந்தாவுக்கும் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகத் தற்போது செய்திகள் பரவி வருகின்றன.
நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து பிரிந்தவர் சமந்தா. நாக சைதன்யா சில மாதங்களுக்கு முன்பு நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்று வந்தார் சமந்தா.
இயக்குனர் ராஜ் நிடிமொரு மற்றும் கிருஷ்ணா டி.கே இருவரும் ராஜ் - டிகே என்ற பெயரில் சில படங்களையும், 'பேமிலி மேன், பார்சி, சிட்டாடல் ஹன்னி பன்னி' உள்ளிட்ட வெப் தொடர்களையும் இயக்கியுள்ளார்கள். 'பேமிலி மேன், சிட்டாடல் ஹன்னி பன்னி' ஆகிய தொடர்களில் சமந்தா நடித்துள்ளார். அப்போது சமந்தாவுக்கும், ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள்.
'பிக்கல்பால்' என்ற புதிய விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 'வேர்ல்டு பிக்கல்பால் லீக்' என்ற போட்டியில் சென்னை அணியின் உரிமையாளராக இருக்கிறார். இந்த போட்டிகள் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றன. அப்போது சமந்தா மற்றும் டிகே ஒன்றாக வந்தது அவர்களுக்கிடையிலான காதலைப் பற்றி வெளிப்படுத்துவதாக உள்ளதென பேசப்பட்டுள்ளது.