சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் 'புஷ்பா 2'. படம் வெளியான முதல் நாளிலிருந்தே வசூல் சாதனையைப் படைத்து வந்தது.
தற்போது 50வது நாளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. 1900 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அதிக வசூலைக் குவித்த படமாக இருக்கிறது.
கடந்த 50 நாட்களில் தெலுங்கில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் 'புஷ்பா 2' படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருந்தது. தெலுங்கு நடிகர்களில் பிரபாஸூக்கு அடுத்து அதிக வசூலைக் குவித்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அல்லு அர்ஜுன். இந்த வசூல் சாதனையை ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரும் பெற முடியவில்லை.