கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி மற்றும் பிரபாஸின் சலார் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசனிடத்தில் கடந்த மாதத்தில் திருமணம் குறித்து மீடியாக்கள் கேள்வி கேட்டபோது, காதலிப்பது எனக்கு பிடிக்கும். அவருடன் பயணிப்பதும் பிடிக்கும். என்றாலும் காதலிக்கும் நபர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நான் யோசித்ததில்லை என்று கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் மீண்டும் நிருபர்கள் அவரிடத்தில் திருமணம் குறித்து கேள்வி கேட்டதால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவர்களை நோக்கி, எதற்காக என் திருமணத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்? என்னுடைய திருமணத்திற்கு நீங்கள் கரண்டு பில் கட்ட போகிறீர்களா? இல்லை சாப்பாடு போட போகிறீர்களா? அப்படி இல்லைன்னா இன்விடேஷன் ஆவது அடிச்சு கொடுக்கப் போறீங்களா? என்று கோபமாக கேள்வி கேட்ட ஸ்ருதிஹாசன், இனிமேல் திருமணம் குறித்து என்னிடத்தில் யாரும் கேள்வி கேக்காதீர்கள் என்று எச்சரிக்கும் தொனியில் பதில் கொடுத்திருக்கிறார்.




