மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலி மற்றும் பிரபாஸின் சலார் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதிஹாசனிடத்தில் கடந்த மாதத்தில் திருமணம் குறித்து மீடியாக்கள் கேள்வி கேட்டபோது, காதலிப்பது எனக்கு பிடிக்கும். அவருடன் பயணிப்பதும் பிடிக்கும். என்றாலும் காதலிக்கும் நபர்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நான் யோசித்ததில்லை என்று கூறியிருந்தார்.
இப்படியான நிலையில் மீண்டும் நிருபர்கள் அவரிடத்தில் திருமணம் குறித்து கேள்வி கேட்டதால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார் ஸ்ருதிஹாசன். அவர்களை நோக்கி, எதற்காக என் திருமணத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்? என்னுடைய திருமணத்திற்கு நீங்கள் கரண்டு பில் கட்ட போகிறீர்களா? இல்லை சாப்பாடு போட போகிறீர்களா? அப்படி இல்லைன்னா இன்விடேஷன் ஆவது அடிச்சு கொடுக்கப் போறீங்களா? என்று கோபமாக கேள்வி கேட்ட ஸ்ருதிஹாசன், இனிமேல் திருமணம் குறித்து என்னிடத்தில் யாரும் கேள்வி கேக்காதீர்கள் என்று எச்சரிக்கும் தொனியில் பதில் கொடுத்திருக்கிறார்.