இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
விஜய் நடித்த 'வாரிசு', ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்ஜர்' படங்களைத் தயாரித்த பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு வீடு, அலுவலகங்களில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரி சோதனை நடைபெற்றது. அவர் மட்டுமல்லாது மேலும் சில தெலுங்கு தயாரிப்பாளர்களிடமும் சோதனை நடைபெற்ற தெலுங்குத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வருமான வரி சோதனை பற்றி தில் ராஜு பேசியுள்ளார். “2008க்குப் பிறகு 16 வருடங்கள் கழித்து இப்போதுதான் எங்களது இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதனிடையே எனது கணக்கு ஆவணங்களை மூன்று முறை சோதனையிட்டுள்ளனர். வியாபாரம் செய்பவர்களிடம் வருமான வரி சோதனை நடைபெறுவது வழக்கமான ஒன்று. நடைபெற்ற வருமான வரி சோதனையில் ஆவணங்கள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக வந்த தகவல்கள் தவறானவை. அப்படி எதுவும் நடக்கவில்லை. தவறான ஆவணங்கள், பணம் ஆகியவை என என்னிடம் எதுவும் கிடையாது.
என்னிடம் மற்றும் எனது குடும்பத்தினரிடம் என மொத்தமாக 20 லட்ச ரூபாய் பணம் வைத்திருந்தோம். அதற்கான உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்தோம். கடந்த ஐந்து வருடங்களில் நான் எந்த சொத்தையும் வாங்கவில்லை. எனது திரைப்படத் தயாரிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் விவரமாக எடுத்து சொன்னேன். எங்களது ஆவணங்கள் அனைத்தும் சரியானவையாகவும், தெளிவாகவும் இருந்ததாக சொன்னார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.