இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் யஷ், தற்போது மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, ஹுமா குரோஷி, கியாரா அத்வானி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பு நடத்த இடையூறாக இருந்ததாக சொல்லி படக்குழுவினர் ஏராளமான மரங்களை வெட்டி சாய்த்து உள்ளார்கள். இந்த தகவல் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்ததும் ஆய்வு நடத்தியவர்கள் தற்போது கர்நாடக அரசு சார்பில் டாக்ஸிக் பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள். இதன் காரணமாக தற்போது டாக்ஸிக் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.