தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
பல கோடி ரூபாய் செலவில் தயாரான படம் வசூலை அள்ளித் தரும் என எதிர்பார்த்த நிலையில் சில கோடி ரூபாய் செலவில் தயாரான படம் வசூலை அள்ளித் தருகிறது. இப்படி நடப்பது தெலுங்குத் திரையுலகத்தில். விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் இந்த பொங்கலுக்கு இரண்டு தெலுங்குப் படங்கள் வெளிவந்தன.
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க 'கேம் சேஞ்ஜர்', அனில் ரவிப்புரடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்க 'சங்கராந்திகி வஸ்துனம்'. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான 'கேம் சேஞ்ஜர்' படம் இன்னும் 200 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. அதே சமயம் 50 கோடி செலவில் தயாராகி தெலுங்கில் மட்டுமே வெளியான 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 200 கோடி வசூலைக் கடந்துவிட்டது.
தெலுங்கில் வெளியான ஒரு பிராந்தியத் திரைப்படம் ஒரே வாரத்தில் 203 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.