வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
பல கோடி ரூபாய் செலவில் தயாரான படம் வசூலை அள்ளித் தரும் என எதிர்பார்த்த நிலையில் சில கோடி ரூபாய் செலவில் தயாரான படம் வசூலை அள்ளித் தருகிறது. இப்படி நடப்பது தெலுங்குத் திரையுலகத்தில். விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் இந்த பொங்கலுக்கு இரண்டு தெலுங்குப் படங்கள் வெளிவந்தன.
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்க 'கேம் சேஞ்ஜர்', அனில் ரவிப்புரடி இயக்கத்தில் வெங்கடேஷ் நடிக்க 'சங்கராந்திகி வஸ்துனம்'. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான 'கேம் சேஞ்ஜர்' படம் இன்னும் 200 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. அதே சமயம் 50 கோடி செலவில் தயாராகி தெலுங்கில் மட்டுமே வெளியான 'சங்கராந்திகி வஸ்துனம்' படம் 200 கோடி வசூலைக் கடந்துவிட்டது.
தெலுங்கில் வெளியான ஒரு பிராந்தியத் திரைப்படம் ஒரே வாரத்தில் 203 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் வசூல் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.