என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழ் சினிமாவின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
திருப்பூரை சேர்ந்த டி.எம் ஜெயமுருகன் 1995ல் 'சிந்து பாத்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். முரளி நடித்த ‛ரோஜா மலரே' படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, அடடா என்ன அழகு, தீ இவன் போன்ற படங்களையும் இயக்கினார். தனது படம் உட்பட ஓரிரு படங்களுக்கு இசையமைக்கவும் செய்தார்.
ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது உடல். இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.