ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
ஜெமினி ஸ்டுடியோ எஸ்எஸ் வாசன் தான் தயாரித்து வெளியிடும் படங்கள் அனைத்திற்கும் புதுமையான விளம்பரங்கள் செய்வார். அதன் ஒரு பகுதியாக தான் பிரம்மாண்டமாக தயாரித்த 'நந்தனார்' என்ற பக்தி படத்தை வெளியிட்டபோது படம் வெளியான தியேட்டர்கள் அனைத்தையும் கோவிலாக அலங்கரிக்க ஏற்பாடு செய்தார்.
அதன்படி படம் வெளியான அனைத்து தியேட்டர்களும் அலங்கரிக்கப்பட்டது. படத்தில் முக்கிய கேரக்டராக இருந்த நந்தி சிலையை எல்லா தியேட்டர்களிலும் வைக்கச் செய்தார். ரசிகர்கள் தியேட்டருக்கு செல்லும் போது கோவிலுக்கு சென்றது மாதிரியான உணர்வை ஏற்படுத்தியது. படத்தின் வெற்றிக்கு அது பெரிய காரணமாக அமைந்தது.
63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பற்றிய கதை. கோவிலுக்கு வெளியில் நின்று சிவனை வழிபட்ட நந்தனாருக்கு நந்தி விலக்கி சிவன் காட்சி அளித்த கதையை அடிப்படையாகக் கொண்ட படம்.
இதில் நந்தனாராக தண்டபாணி தீக்ஷதர் நடித்தார். சுந்தரி பாய், செரு களத்தூர் சாமா, எம்.ஆர் சாமிநாதன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். படத்தை முத்துசாமி ஐயர் இயக்கி இருந்தார் . எம்.டி.பார்த்தசாரதி, எஸ். நாகேஸ்வரராவ் இசை அமைத்திருந்தனர். 1942 ஆம் ஆண்டு படம் வெளியானது.