32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை இயக்கப் போகிறார். அதோடு சூர்யா நடிப்பில் ரோலக்ஸ், மற்றும் இரும்புக்கை மாயாவி என இரண்டு படங்களை இயக்கவும் திட்டமிட்டிருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் தற்போது இரும்புக்கை மாயாவி படத்தை பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா படமாக இயக்கப் போகிறாராம். இதை புஷ்பா, புஷ்பா- 2 படங்களை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.