32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
மலையாள சினிமாவில் இயக்குனர் மற்றும் பிரபல நடிகராக வலம் வருபவர் பசில் ஜோசப். இவர் கோதா, மின்னல் முரளி உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிகர் சூர்யாவிடம் பசில் ஜோசப் புதிய படத்திற்காக ஒரு கதையை கூறியுள்ளார். இது சூப்பர் ஹீரோ சம்மந்தப்பட்ட படம் என்கிறார்கள். இதுதொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தை தற்போது இறுதிகட்டத்தை நகர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் உள்ளது. இந்த படங்களை முடித்த பிறகு பசில் ஜோசப் கதையில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த படங்கள் தவிர்த்து கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் மே 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது.