ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் ஒரு மாதத்திற்கு முன் திரைக்கு வந்த படம் ‛புஷ்பா -2'. இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதை அடுத்து கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பினார் அல்லு அர்ஜுன். மேலும், இந்த படத்திற்கு பாசிட்டீவான விமர்சனங்கள் வெளியானதால் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் வசூலை வாரி குவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வரை இந்த படம் 1,850 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதோடு திரையிடப்பட்ட பல இடங்களில் தொடர்ந்து இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. புதிய படங்கள் வெளியானபோதும் இந்த படத்தின் வசூல் பாதிக்கவில்லை என்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த படம் இன்னும் இரண்டு தினங்களில் 2000 கோடியை எட்டி விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, அல்லு அர்ஜுன் நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இந்த படத்திற்கு இன்னும் பெரிய அளவில் விளம்பரம் செய்திருந்தால் இதைவிட கூடுதலான வசூலை பெற்றிருக்கும் என்றும் டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.




