ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் ஒரு மாதத்திற்கு முன் திரைக்கு வந்த படம் ‛புஷ்பா -2'. இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதை அடுத்து கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று திரும்பினார் அல்லு அர்ஜுன். மேலும், இந்த படத்திற்கு பாசிட்டீவான விமர்சனங்கள் வெளியானதால் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் வசூலை வாரி குவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வரை இந்த படம் 1,850 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதோடு திரையிடப்பட்ட பல இடங்களில் தொடர்ந்து இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. புதிய படங்கள் வெளியானபோதும் இந்த படத்தின் வசூல் பாதிக்கவில்லை என்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த படம் இன்னும் இரண்டு தினங்களில் 2000 கோடியை எட்டி விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, அல்லு அர்ஜுன் நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் இந்த படத்திற்கு இன்னும் பெரிய அளவில் விளம்பரம் செய்திருந்தால் இதைவிட கூடுதலான வசூலை பெற்றிருக்கும் என்றும் டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.