லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கு நடுஇரவு 1 மணி காட்சிகள், அதிகாலை 4 மணி காட்சிகள் என தென்னிந்திய மாநிலங்களில் நடைபெற்று வந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையில் 'துணிவு' பட அதிகாலை காட்சியின் போது இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். அதன்பின் தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கான அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டது.
கடந்த மாதம் 'புஷ்பா 2' படம் வெளிவந்த போது ஹைதராபாத்தில் நடந்த நெரிசலில் பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தெலங்கானா அரசு அறிவித்தது. ஆனால், 'கேம் சேஞ்ஜர்' படத்திற்கு யு டர்ன் போட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து தெலங்கானா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி பல கேள்விகளை எழுப்பினார். அனுமதி தர மாட்டோம் என்று சொல்லிவிட்டு அனுமதி வழங்கியது ஏன் என்றும் கேட்டார். தூக்கத்தைக் கெடுத்து சினிமா பார்க்க வேண்டுமா என்றும் கேட்டுள்ளார். வழக்கை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
இதனிடையே, ஆந்திர உயர்நீதிமன்றம் இது குறித்து தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி அனுமதி வழங்கப்பட்ட அதிகாலை 1 மணி 4 மணி காட்சிகளை ரத்து செய்துள்ளது. அதனால், பொங்கல் வெளியீட்டில் எந்த தெலுங்குப் படத்திற்கும் அதிகாலை காட்சிகள் நடக்காது.
வரும் நாட்களில் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்புக் காட்சிகள், சிறப்புக் கட்டண உயர்வு ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்பில்லை. நீதிமன்றம் தலையிட்டுவிட்டதால் மாநில அரசுகள் அப்படியான அனுமதியிலிருந்து பின் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.