ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மிருணாளி ரவி. சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு எம்.ஜி.ஆர். மகன், கோப்ரா, எனிமி, ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் மிருணாளி ரவி ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் கூறுகையில், " பொங்கல் நேரத்தில் நான் இதுவரை மதுரை வந்ததில்லை. இப்போது ஊரே திருவிழா கோலமாக உள்ளது. மதுரை பொண்ணு போன்று பேச ஆசையாக உள்ளது. எனக்கு மதுரை வட்டார வழக்கு பேச்சு பேச தெரியாது. ஆனால், வாய்ப்பு வந்தால் கற்றுக்கொண்டு நடிப்பேன் .அது எனக்கு சரியாக வரவில்லை என்று யாரும் சொல்லி விடக்கூடாது. மதுரை பொண்ணு மாதிரி பேசி விட்டார் என்று சொன்னால் போதும்" என்றார்.