சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? |
மார்க் ஆண்டனி, ரத்னம் படங்களுக்கு பிறகு, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த 'மதகஜராஜா' படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட விஷால், மேடையில் மைக்கை பிடித்து பேசும்போதே அவரது கைகள் நடுங்கியது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த வீடியோ வெளியானதை அடுத்து அவரைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தான் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, விஷால் குறித்து கூறுகையில், விஷால் ஒரு தைரியமானவர். இப்போது ஏதோ ஒரு மோசமான கட்டத்தில் இருந்து வருகிறார். இதிலிருந்து கண்டிப்பாக அவர் மீண்டு வருவார். அதற்கு அவரது தைரியமே அவருக்கு துணை நிற்கும். அதோடு என் நண்பன் விஷாலின் நல்ல மனசுக்கும், அவரது பெற்றோரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக மீண்டும் அவர் சிங்கம் போல் மீண்டு வருவார் என்று தனது நம்பிக்கையை தெரிவித்தார் ஜெயம் ரவி.