இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
1999ம் ஆண்டில் வெளிவந்த 'சேது' படம் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா. அதன்பின் 'நந்தா, பிதாமகன், நான் கடவுள்' ஆகிய படங்கள் அவருடைய சிறந்த படைப்புகளாக அமைந்தன. அந்தப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் விக்ரம், சூர்யா, ஆர்யா ஆகியோர் காலூன்றக் காரணமாக அமைந்தார்.
அதன்பின் அவர் இயக்கத்தில் வெளிவந்த 'அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா' ஆகிய படங்களில் 'பரதேசி' படம் மட்டுமே தரமான ஒரு படைப்பாக இருந்தது. மற்ற படங்களில் பாலாவின் முத்திரை பதிக்கப்படவில்லை. 2018ல் வெளிவந்த 'நாச்சியார்' படத்திற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக பாலாவின் படம் ஒன்று தியேட்டர்களில் வெளியாகவில்லை.
நாளை அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'வணங்கான்' படம் வெளியாகிறது. மீண்டும் பழைய பாலாவை இந்தப் படத்தில் பார்க்க முடியுமா என்று ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.