22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
பொதுவாக எம்ஜிஆர் படம் வெளியானால் அதிமுகவினர் தியேட்டர்களில் கொடியேற்றி தோரணம் கட்டி அதை ஒரு திருவிழாவாக கொண்டாடுவார்கள். கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய படங்கள் வெளிவந்தால் திமுகவினர் அதேபோல கொண்டாடுவார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் தியேட்டரில் கொடியேற்றி தோரணம் கட்டி கொண்டாடிய ஒரே படம் 'சிவப்பு மல்லி'.
1981ம் ஆண்டு வெளியான 'சிவப்பு மல்லி' கம்யூனிச சிந்தனையை சொன்ன ஆரம்பகால படங்களில் முக்கியமானது. ஏவிஎம் சரவணன், அவரது சகோதரர் பாலசுப்பிரமணியம் இணைந்து படத்தை தயாரித்தனர். இது அரசியல் படம் என்பதால் ஏவிஎம் பேனரில் தயாரிக்காமல் பாலசுப்ரமணியம் அண்ட் கம்பெனி என்ற பெயரில் தயாரித்தார்கள். ராம.நாராயணன் இயக்கினார். ஆனாலும் இது ராம நாராயணின் சிந்தனையில் உதித்த படம் அல்ல.
இதன் கதையை எழுதியவர் நடிகரும், கதாசிரியரும், தீவிர கம்யூனிஸ்டுமான ஆந்திராவை சேர்ந்த மதல ரங்கா ராவ். 'எர்ரா மல்லேலு' என்ற பெயரில் சினிமாவாக தயாரானது. முதலாளிகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய இரு கம்யூனிச சித்தாந்த தோழர்களைப் பற்றிய இப்படம் ஆந்திராவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு சிறந்த திரைப்படத்துக்கான மாநில அரசின் நந்தி விருதையும் வென்றது.
ஏவிஎம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியது. அந்த வருட ஆரம்பத்தில் விஜயகாந்த் நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை' வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஒரு படத்திலேயே அநியாயத்தைக் கண்டு பொங்கும் கோபக்கார இளைஞன் என்ற பிம்பம் விஜயகாந்த் மீது ஏற்பட்டிருந்தது. சிவப்பு மல்லியின் பிரதான வேடத்திற்கு இவர்தான் சரியானவர் என்று விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தது ஏவிஎம். அவரது நண்பராக சந்திரசேகர் நடித்தார். இவர்கள் தவிர சாந்தி கிருஷ்ணா, அருணா, அனுராதா உள்பட பலர் நடித்தார்கள்.
சங்கர் - கணேஷ் இசை அமைத்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற 'எரிமலை எப்படி பொறுக்கும்...' என்ற பாடல் இப்போதும் கம்யூனிஸ்ட் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.